உதயநிதியும் நாமலும் நண்பர்களா?: திமுகவை ஈழத்தமிழர்கள் ஆதரிக்க கூடாது

0
14

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழக சட்டசபையிலோ அல்லது இந்திய நாடாளுமன்றத்திலோ ஈழத் தமிழர்கள் படும் துயரங்கள் குறித்து யாரும் பேசவில்லை என அமெரிக்கா வாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

”ஈழத் தமிழர்கள் தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க திமுகவுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அக்கட்சி ஈழத் தமிழர்களின் நலனில் முன்னுரிமை அல்லது அக்கறை காட்டவில்லை.

திமுக போரை நிறுத்தியிருக்கலாம்

திமுகவின் வரலாறு ஈழத் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் காட்டுகிறது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்க திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி ஒப்புதல் அளித்ததற்குக் காரணம் ஈழத் தமிழர்களை தமிழகத் தமிழர்களிடமிருந்து பிரித்து வைப்பதே என்பதை சமீபத்தில் ஈழத் தமிழர்கள் கண்டுபிடித்தனர்.

கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்தால், தமிழ்நாட்டுத் தமிழர்கள் தீவைக் கட்டுப்படுத்துவார்கள். அதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நட்புறவான சூழல் உருவாகும் என்பது அவரது நம்பிக்கை.

இலங்கையில் நடந்த கடைசிப் போரின் போது காங்கிரஸ் கட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுவதன் மூலம் திமுக போரை நிறுத்தியிருக்கலாம்.

சுமந்திரன் பொய் கூறினார்

தி.மு.க.வின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு புதிய தேர்தலை தொடங்கியிருக்க வேண்டும். இந்த நடவடிக்கை காங்கிரஸையோ அல்லது இந்தியாவையோ நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வாதிட தூண்டியிருக்கலாம்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடியின் போது ஸ்டாலின் குறிப்பாக தமிழர்களுக்கு அரிசி அனுப்ப எண்ணினார். எனினும் சிங்களக் குடிமக்களின் நல்ல நடத்தையை மேற்கோள் காட்டி தமிழர்களை மட்டும் குறிவைக்காமல் இலங்கை முழுவதற்கும் அரிசி வழங்குவதாக எம்.ஏ.சுமந்திரன் பொய் கூறினார்.

இதனையடுத்து சிங்கள மக்களுக்கு அரிசி விநியோகிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானித்தார். கொழும்பில் இருந்து சிறியளவு அரிசி தமிழர்களுக்கு சென்றடைந்தது. ஆனால் அது ஒவ்வொரு தமிழருக்கும் போதுமானதாக இல்லை.

வன்னியில் நடந்த போரின் போது தமிழர்களுக்கு பஞ்சத்தை ஏற்படுத்துவதில் ஈடுபட்ட அதே சிங்கள மக்களுக்கு ஸ்டாலின் அரிசி வழங்கியது துரதிஷ்டவசமானது.

போர் முடிவடைந்து 15 வருடங்கள்

முதல்வர் ஸ்டாலினின் மகன் நாமல் ராஜபக்சவின் நெருங்கிய நண்பர் என்பதால் முதல்வர் ஸ்டாலினும், திமுகவும் இலங்கையை விமர்சிப்பதில் விருப்பமில்லை.

போருக்குப் பிறகு ஈழத் தமிழர்கள் சிங்களவர்களைத் சமாதானப்படுத்தி அவர்களுடன் வாழுங்கள் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தினார்.

பாஜக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறை, ஆக்கிரமிப்பு, இனப்படுகொலைகளை ஒழிக்க அவர்கள் எடுத்த நடவடிக்கைகள் எதையும் குறிப்பிட முடியுமா? இல்லை.

சிங்கள ஆட்சியின் கீழ், தமிழர்கள் அடிமைத்தனம் போன்ற நிலைமைகள், நில அபகரிப்பு மற்றும் கோவில் இடிப்புகள் – இவை அனைத்தும் சிங்கள பௌத்தர்கள் நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும் தமிழர்கள் இன்னமும் சிறைச்சாலை மற்றும் சித்திரவதைகளுக்கு பயந்து வாழ்கின்றனர்.

அதிமுகவை அல்லது நாம் தமிழரை ஆதரிக்க வேண்டும்

தமிழ் விடுதலை அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) புத்துயிர் பெற சதி செய்ததாக அவர்கள் அடிக்கடி குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.

மேலும் யுத்தம் முடிவடைந்த போதிலும் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும் அடக்குமுறைகளும் தொடர்கின்றன. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகள் பரந்த அளவில் இராணுவமயமாக்கப்பட்டு தமிழருக்குல் அதிர்ச்சி மற்றும் ஒடுக்குமுறையின் சூழலை நிலைநிறுத்துகின்றன.

இப்போது தமிழர்களுக்கு அதிமுக மற்றும் சீமானின் கட்சியான “நாம் தமிழர்” மட்டுமே என்று எஞ்சியிருக்கின்றது. ஈழத்தமிழ் மக்களாகிய நாங்கள், இலங்கையின் வடகிழக்கு பிராந்தியத்தில் இறையாண்மைக்கான எமது வேட்கையில் உங்கள் ஆதரவை மதிப்பதோடு உதவியையும் நாடுகிறோம்.

ஈழத் தமிழர்களாகிய நாம் எமது இனத்துக்கு ஆதரவாக ஏப்ரல் 19 ஆம் திகதி பொறுப்புடன் வாக்களிக்குமாறு எமது தமிழ் உறவுகளை கேட்டுக்கொள்கின்றோம். அதிமுகவை அல்லது நாம் தமிழரை ஆதரிப்பதை கருத்தில் கொள்ளவும். நன்றி.

ஸ்டாலின் ஆட்சிக்கு முந்தைய காலமான அம்மா ஜெயலலிதா காலத்துக்குப் பயணிப்போம்” என்றும் அமெரிக்காவாழ் புலம்பெயர் தமிழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.