தங்க முலாம் பூசப்பட்டு மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்ட சிலையுடன் இருவர் கைது!

0
30

தங்க முலாம் பூசப்பட்டு மாணிக்கக் கற்களால் அலங்கரிக்கப்பட்டதாகக் கூறப்படும் சிலையொன்றை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டதாக முல்லேரியா பொலிஸார் தெரிவித்தனர்.

முல்லேரியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் முல்லேரியா பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அங்கொடை மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இந்த சிலை தொடர்பில் தொல்பொருளியல் திணைக்களத்திடம் தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.