இயக்குனர் ஷங்கர் மகளுக்கு இரண்டாம் திருமணம் முடிந்தது!

0
48

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ரோஹித் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. ஆனால், ரோஹித் போக்ஸோ சட்டத்தில் சிக்கியதால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.

சமீபத்தில் தனது மகளுக்கு இரண்டாம் திருமணமத்திற்கான ஏற்பாடு செய்து வந்தார் ஷங்கர். நிச்சயதார்த்த புகைப்படங்கள் கூட வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது. மேலும் தமிழக முதல்வர், பாலிவுட் நட்சத்திரங்கள் என அனைவருக்கும் ஷங்கர் நேரில் சென்று பத்திரிகை வைத்தார்.

இந்த நிலையில், இன்று பிரம்மாண்டமான முறையில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் இரண்டாம் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. தருண் கார்த்திகேயன் என்பவரை கரம்பிடித்துள்ளார் ஐஸ்வர்யா.

இந்த திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். அந்த புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது. மேலும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைதளங்கள் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.