மகளையும், மகனையும் நண்பனுக்கு இரையாக்கிய தாய்!

0
146

இந்தியா – டெல்லியின் தெருக்களில் 10 வயது சிறுமி ஒருவர் யாருடைய ஆதரவுமின்றி சுற்றியிருக்கிறார். பின்னர் அந்த சிறுமி பொதுமக்களின் உதவியுடன் டெல்லி பொலிஸில் ஒப்படைக்கப்பட்டார். அவர்கள், குழந்தைகள் நலக் குழுவின் பராமரிப்பில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அங்குச் சிறுமிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அதில், சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாகச் சிறுமியிடம் விசாரிக்கப்பட்டதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

சிறுமி அளித்த வாக்குமூலத்தில்,“உத்தரப்பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் என் அம்மாவுடன் நானும் எனது அண்ணாவும் வசித்து வந்தோம். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு என் அப்பா இறந்துவிட்டார். அதனால், என் தாய்வழி தாத்தா பாட்டி வீட்டிலிருந்தோம். அப்போது அம்மா அவரின் நண்பரை வீட்டுக்கு அழைத்து வந்து என்னிடம் தவறாக நடந்துகொள்ள வைத்தார். இதுபோல பலமுறை நடந்திருக்கிறது. இதை வெளியில் சொல்லக்கூடாது எனக் கடுமையாகச் சித்திரவதை செய்தார்.

என் அண்ணாவையும் அவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார். இதனால் அண்ணா வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டான். அம்மா பாலியல் தொழில் செய்கிறார் என அறிந்துகொண்டேன். என்னையும் அதில் ஈடுபட வைக்க விரும்பினார் என்பதையும் தெரிந்துகொண்டேன். அதனால் வீட்டை விட்டு ஜனவரி 20-ம் திகதி வந்துவிட்டேன்” எனத் தெரிவித்தார்.

 தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக டெல்லியில் வசிக்கும் ராஜு என்பவனைச் சிறுமி அடையாளம் காட்டினார். சிறுமி மாயமான பிறகும் அவரின் தாய் பொலிஸில் முறைப்பாடு  அளிக்கவில்லை. குழந்தையின் தாயும் அவரது நண்பரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.