அரச மரத்துக்கு அடியில் பழமையான கிணறு…ஆச்சரியத்துடன் பார்வையிட்ட மக்கள்!

0
58

தமிழகத்தில் உள்ள ஒரு சாலையில் அரச மரத்தை வேரோடு பிடுங்கிய போது, அதற்கு அடியில் பழமையான கிணறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.இச் சம்பவம் வியப்புக்குரிய ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

அவினாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபை கட்டிடம் முன் இறங்கு தளம் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.

இதன்படி, குறித்த இடத்தில் இறங்கு தளம் அமைக்க இடையூறாக காணப்பட்ட 65 ஆண்டுகள் பழமையான அரச மரம் மற்றும் 25 ஆண்டுகள் பழமையான சேவல் கொண்டை பூ மரம் ஆகிய 2 மரங்களை வேருடன் பிடுங்கி மறுநடவு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதில் அதிசயம் என்னவென்றால் 12 அடி சுற்றளவிலிருந்த அரச மரத்தை வெட்டி அகற்றும் போது, அந்த மரத்திற்கு அடியில் பழமையான கிணறு இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

40 அடி ஆழம் கொண்ட இந்த கிணற்றின் குறுக்கே 2 ராட்சத இரும்பு கம்பிகள் இருந்தது.இந்த கிணற்றின் ஓரம் வளர்ந்த அரச மரம், கிணற்றையே மூடிவிட்டது என்பது தெரிந்தது. இதற்கமைய கிணற்றில் தற்போது தண்ணீர் இருப்பதால் பலரும் கிணற்றை ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.