தடையை மீறி பல நாடுகளுக்கு வெங்காயத்தை கொடுத்து, ராஜதந்திர அரசியல் செய்கிறதா இந்தியா?

0
71

இந்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்குத் தடை விதித்து நீண்ட காலமான நிலையிலும், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற சில நாடுகளுக்கு அரசின் அனுமதியுடன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது, உலகளவில் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெங்காயம் குறைந்த விலைக்கே விற்கப்படுவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கோபமடைந்துள்ளனர்.

இந்திய விவசாயிகளுக்கு ஒரு கிலோ வெங்காயத்திற்கு ரூ.12 முதல் ரூ.15 வரை தரப்படுவத்தாகவும், அதே வெங்காயம் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சென்றடையும் போது, அதன் விலை கிலோவுக்கு ரூ.120 ஆக விற்கப்படுவதாகவும் ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.

வெங்காயம் ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாடுகளுக்கு மட்டும் அரசாங்கம் வெங்காயத்தை ஏன் ஏற்றுமதி செய்கிறது என்பது கேள்வி.

இந்திய அரசு இப்போது வெங்காயத்தை ராஜதந்திரத்திற்காகப் பயன்படுத்துகிறதா?

வெங்காய ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்ததில் இருந்து, விவசாயிகள் அதை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.