விவாகரத்து கோரி நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா மனு

0
43

புகடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரு வீட்டார் சம்மதத்துடன் இவர்களுடைய திருமணம் நடைபெற்றது.

இந்த தம்பதிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் பிரியப்போவதாக அறிவித்தனர். இவர்களுடைய பிரிவு அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.

தங்களுடைய பிரிவு குறித்து அறிவித்து இரண்டு வருடங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில்இ தற்போது விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதி மனு தாக்கல் செய்துள்ளார்களாம்.

2004ஆம் ஆண்டு நடந்த தங்களுடைய திருமணம் செல்லாத என அறிவிக்க வேண்டும் என கேட்டு முறையிட்டுள்ளனர். இந்த விஷயம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.