சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி

0
40

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 22 ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி  வெற்றி பெற்றுள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா க்னைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

சென்னை அணி சார்பில்  Ravindra Jadeja மற்றும் Tushar Deshpande ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.

140 ஓட்டங்களை வெற்றி இலக்காக  கொண்டு களம் இறங்கிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 17.4 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 141 ஓட்டங்களை பெற்று வெற்றி  பெற்றது.  

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சார்பில் Ruturaj Gaikwad அதிகபட்ச ஓட்டங்களான 67 ஓட்டங்களை பெற்றார்.