பிரதமர் பதவி விலக வேண்டும்; நெதன்யாகுவுக்கு எதிராக மக்கள் போராட்டம்

0
47

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் போர் ஆறாவது மாதத்தை எட்டியுள்ள போது காஸாவில் குழந்தைகள், பெண்கள் உட்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விரைவில் தேர்தலை நடத்தி பிரதமர் பதவி விலக வேண்டும் என இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் மக்கள் போராட்டம் நடத்தினர்.

டெல் அவிவ் நகரில் 10,000க்கும் மேற்பட்டோர் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பிரதமர் நெதன்யாகு பதவி விலகக் கோரி முழக்கங்களை எழுப்பினர்.

பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர். சில இடங்களில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.