இலங்கைலிருந்து பல வகையான விதைகள் ஏற்றுமதி!

0
66

முதன்முறையாக, இந்த நாட்டில் பல வகையான விதைகள் ஏற்றுமதிக்கு தயார் செய்யப்பட்டுள்ளன.

மிளகாய், கத்தரிக்காய், கறி மிளகாய், வெண்டிக்காய், சோளம் உள்ளிட்ட விதைகள் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டு, அவை ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல வெளிநாடுகளில் இருந்தும் அந்த விதைகளுக்கு அதிக கேள்வி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயத்துறை வல்லுனர்கள் மூலம் விதைகள் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், அந்த விதைகளை மேம்படுத்துதல் மற்றும் பதப்படுத்துதல் ஆகியவை இலங்கையின் தனியார் துறையினரால் அதியுயர் தொழில்நுட்பம் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.