தாய்வானில் நிலநடுக்கம்!

0
45

25 ஆண்டுகளில் இல்லாத அளவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் கடந்த ஏப்ரல் 3 ஆம் திகதியன்று தாய்வான் தீவு நாட்டை உலுக்கியது. தாய்வான் நாட்டு தரவுகள் படி சுமார் 7.5 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பான் நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடபட்டது. அடுத்த தினமே ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானை தொடர்ந்து தெற்கு சீனாவிலும் லேசான நிலநடுக்கம் உணரபட்டதாக கூறப்படுகிறது.

தாய்வானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும்,  50க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வெளியானது. அந்த வகையில், தாய்வான் நிலநாடுக்கத்திற்கு மறுநாளே ஜப்பானில் சுமார் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானது. எனினும், சுனாமி எச்சரிக்கை கொடுக்கபடாமல் இருந்தது.

இந்நிலையில், நேற்று (ஏப்ரல் 5) இரவில் சுமார் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மியான்மர் நாட்டில் ஏற்பட்டு இருக்கிறது. இந்த தகவலை ஐரோப்பிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கம் கடலில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொடிருப்பதாகவும் கூறப்பட்டது. எனினும், இந்த நிலநடுக்கத்தினால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை எனவும் கூறபட்டிருக்கிறது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி பகுதிகளில் சுமார் 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதேப்போல, அமெரிக்காவின் நியூ யோர்க் நகரிலும் சுமார் 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது இருக்கிறது. அமெரிக்காவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் புரூக்ளின் கட்டிடங்கள் குலுங்கியுள்ளன. லிபர்ட்டி தீவில் உள்ள ‘சுதந்திர சிலை’ யும் அசைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை மக்களும் உணர்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.