120 மணி நேர பட்டினி..!; Infosys நாராயண மூர்த்தியின் மறக்க முடியாத அனுபவம்

0
66

தகவல் தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய நிறுவனமான இன்ஃபோசிஸின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி இந்தியாவில் பலரையும் ஈர்க்கும் ஒரு முன்னுதாரணம்.  

அவரது வாழ்க்கை கதை, கடின உழைப்பு, தன்னம்பிக்கை இலட்சியத்தின் மீதான உறுதியான பற்று ஆகியவற்றை காட்சிப்படுத்துகிறது.

கடின உழைப்பும், தியாகமும் (Hard Work And Sacrifice)

ஐரோப்பாவில் பயணம் செய்த போது 120 மணி நேரங்கள் சாப்பிடாமல் இருந்த அனுபவம் தொடங்கி  டிக்கெட் இல்லாமல் 11 மணி நேரம் ரயிலில் பயணித்தது போன்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் மூர்த்தியின் பயணத்தில் ஏராளமாக உள்ளன. இந்த சம்பவங்கள் அவரது கனவுகளை அடைய அவர் செய்த கடின உழைப்பையும், தியாகங்களையும் எடுத்துக் காட்டுகின்றன.

தொழில்நுட்பத்தின் மீதான ஆர்வம் மூர்த்தியிடம் இளமைப் பருவத்திலிருந்தே இருந்தது. ஐ.ஐ.டி. கான்பூரில் பட்டம் பெற்ற பிறகு ரத்தன் டாடாவின் (Ratan Tata) Air India, TELCO, மற்றும் TISCO ஆகிய நிறுவனங்களில் லாபகரமான வேலை வாய்ப்புகள் கிடைத்த போதும் தனது ஆர்வத்தில் தொடர்ந்து செல்லும் வகையில் இந்தியாவின் முதல் டைம் ஷேரிங் கணினி அமைப்பில் (India’s first time-sharing system) பணிபுரியும் வாய்ப்பை தேர்ந்தெடுத்தார். 

இந்த முடிவு அவரது தொழில்நுட்ப ஆர்வத்தின் மீதான ஈடுபாட்டை  உலகிற்கு காட்டுகிறது. மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி ஒரு புகழ்பெற்ற கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் அவருக்கு தொடர்ந்து ஆதரவாக இருந்து வருகிறார்.

கனவை நனவாக்குதல் (Making Dreams A Reality)

இன்று இன்ஃபோசிஸ் நிறுவனம் மூர்த்தியின் கனவின் சான்றாக நிற்கிறது. இந்த நிறுவனம் ரூ.6 லட்சம் கோடி மதிப்புடைய சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது. மேலும் மூர்த்தியின் சொந்த வெற்றி ரூ.37,000 கோடிக்கும் மேற்பட்ட அவரது சொத்து மதிப்பில்  பிரதிபலிக்கிறது.

என்.ஆர். நாராயண மூர்த்தியின் கதை தொடர்ந்து இளைஞர்களை ஈர்க்கிறது. கடின உழைப்பு, விடா முயற்சி மற்றும் கனவுகளை துரத்தும் துணிச்சல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவரது வாழ்க்கை  எடுத்துக்காட்டுகிறது.