பூமி இரண்டாக பிளந்து புதிய கடல் உருவாகிறதா?

0
65

பூமியின் நிலப்பரப்பின் அடியில் இருக்கும் டெக்டோனிக் தட்டுகளின் இயக்கத்தின் அடிப்படையில் தான் பூமி உருவனாதாக அறிவியல் கூறுகிறது. தற்போது இந்த டெக்டோனிக் தட்டுகளின் காரணமாக உலகில் ஒரு புதிய கடல் உருவாகப்போவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

ஆப்ரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் கண்டத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்கும் விரிசலை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் காரணமாக ஆப்ரிக்காவில் புதிய கடல் உருவாக வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் ஏற்கனவே 5 பெருங்கடல்கள் உள்ள நிலையில் இது ஆறாவது பெருங்கடலாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

கிழக்கு அப்ரிக்காவில் பிளவு அமைப்பு என அழைக்கப்படும் இடம் கடந்த 2005 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தி எர்த் அறிக்கையின் படி, இந்த பகுதி சுமார் 22 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றியதாக கூறப்படுகிறது.

பூமியில் தற்போது பசுபிக், அண்டார்டிங், ஆர்க்டிக், இந்தியன் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்கள் உள்ளன. இந்நிலையில் ஆறாவதாக புதிய பெருங்கடல் உருவானால் அது புவியியலில் கடும் மாற்றத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக டெக்டோனிக் தட்டுகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி செல்வது அதிகரித்துள்ளது விஞ்ஞானிகளின் ஆர்வத்தை தூண்டியுள்ளது. கிழக்கு ஆப்ரிக்க பிளவு இரண்டு டெக்டோனிக் தகடுகளின் விளைவு என்று ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கிழக்கில் சோமாலி தட்டு மற்றும் மேற்கில் நுபியன் தட்டு காரணமாக இது நடக்கிறது. இந்த இரண்டு தட்டுகளும் பிரிந்து செல்வதன் காரணமாக விரிசல் ஆழமாகிறது. மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தென் அமெரிக்காவும் ஆப்ரிக்காவும் தனித்தனி கண்டங்களாக பிரிந்தபோது இதுபோன்ற நிகழ்வு காணப்பட்டதாக ஜெருசலேம் போஸ்ட் தெரிவித்துள்ளது.

இந்த தட்டுகள் வருடத்திற்கு சில மீட்டர்கள் தூரம் பிரிந்து செல்வதாக கூறப்படுகிறது. எத்தியோப்பியா, உகாண்டா போன்ற நிலத்தால் சூழப்பட்ட ஆப்ரிக்க நாடுகளில் கடற்கரை உருவாக உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த விரிசல் ஆண்டுக்கு 0.7 மிமீ என்ற விகிதத்தில் அதிகரித்து வருவதாக மற்றொரு அறிக்கை கூறுகிறது.

“ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் ஆகியவை அஃபார் பகுதியையும் கிழக்கு ஆப்பிரிக்க பிளவு பள்ளத்தாக்கையும் வெள்ளத்தில் மூழ்கடித்து ஒரு புதிய பெருங்கடலாக உருவாகும்.

மேலும் கிழக்கு ஆப்பிரிக்காவின் அந்த பகுதி அதன் சொந்த சிறிய கண்டமாக மாறும்” என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் எமரிட்டஸ் பேராசிரியர் மசிபிள் கூறுகிறார்.