குழந்தை தலையில் சிக்கிய பாத்திரம்!

0
64

தமிழகத்தில் உள்ள பகுதியொன்றில் ஒன்றரை வயது குழந்தையின் தலையில் பாத்திரம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவம் சென்னையில் உள்ள போரூரில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்திரத்தை தீயணைப்புத் துறையினர் 1 மணித்தியால போராட்டத்திற்கு பின் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சென்னை போரூரில் வசித்து வரும் கார்த்திக்-ஆனந்தி தம்பதியரின் ஒன்றரை வயது குழந்தையான கிருத்திகா, வழக்கம்போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது ஒரு பாத்திரத்தில் குழந்தை தன் தலையை விட்டதாக கூறப்படுகிறது.

எவ்வளவுவோ முயற்சித்தும் குழந்தையின் தலையில் சிக்கிக்கொண்ட பாத்திரைத்தை பெற்றோரால் அகற்ற முடியவில்லை.

பின்னர் இதுதொடர்பாக மதுரவாயல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை கத்திரி கொண்டு வெட்டியெடுத்து குழந்தையை எவ்வித காயமுமின்றி பத்திரமாக மீட்டனர்.