இளவரசி கேட் மிடில்டனிடம் உணர்ச்சி வசப்பட்ட மன்னர் சார்லஸ்

0
57

இளவரசி கேட் மிடில்டன் தனக்கு புற்றுநோய் இருப்பதனை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முன்னராக சார்லஸ் மன்னருடன் தனிப்பட்ட முறையில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

சார்லஸ் மன்னர் இளவரசி கேட்டுடன் உணவருந்தும் பொருட்டு லண்டனில் இருந்து விண்ட்சர் மாளிகைக்கு சென்றதாகவும் அங்கு உணர்ச்சி வசப்பட்ட மன்னர் தமது போராட்டம் தொடர்பிலும் மனந் திறந்ததாக தெரியவந்துள்ளது.

பிரித்தானிய அரச குடும்பம்

புதிய ஆண்டு ஆரம்பமான சில மாதங்களில் பிரித்தானிய அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் இருவர் புற்றுநோய் சிகிச்சையை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், தங்கள் போராட்டங்கள் குறித்து இருவரும் பகிர்ந்துக் கொள்ளவும் ஒருவருக்கொருவர் தேற்றவும் அந்த சந்திப்பு வாய்ப்பாக அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உணர்ச்சி வசப்பட்ட மன்னர்

அதன்போது சார்லஸ் மன்னர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மதிய உணவை முடித்து வெளியேறியதாகவும் கூறப்படுகிறது. அதேவேளை மன்னர் சார்லஸ் பெப்ரவரி மாதம் ஆரம்பத்தில் இருந்தே புற்று நோய்க்கான சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.