வாசிக்க வேண்டிய தேவை இல்லை; கோட்டா புத்தகத்தை தூக்கி எறிந்தார் பசில்!

0
68

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய எழுதிய புத்தகத்தை நான் இன்னமும் வாசிக்கவில்லை என்றும், அதனை தாம் வாசிக்க விரும்பவும் இல்லை என முன்னாள் நிதியமைச்சர் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

என்னிடம் அந்த நூல் இல்லை என தெரிவித்துள்ள பசில், கோட்டாபய அந்த நூலின் ஒரு பிரதியை எனக்கு வழங்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நூலை வாசிக்க விரும்பவில்லை

கோட்டாபயவின் நூலின் டிஜிட்டல் வடிவமும் கிடைக்கவில்லை என்றும், ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஊடகப்பிரிவு அந்த நூலின் டிஜிட்டல் பிரதியை எனக்கு வழங்கவில்லை எனவும் தான் அந்த நூலை வாசிக்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நூலை பற்றி எனக்கு எந்த கோபமும் இல்லை ஆனால் கோட்டபய நூல் ஒன்றை எழுதவுள்ளார் அதற்கான விபரங்களை சேகரிக்கின்றார் என அறிந்தேன். நாமல் கூட புத்தககடையொன்றிலேயே அந்த நூலை வாங்கியுள்ளார் கோட்டாபயவிடமிருந்து அந்த நூல் எனக்கு கிடைக்கும் என நான் நம்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அதோடு எங்கள் குடும்பத்தில்எந்த புரிந்துணர்வு இன்மையும் இல்லை அவர்கள் அந்த நூலை எனக்கு வழங்காதது ஒரு பிரச்சினையில்லை எனவும் பசில்ராஜபக்ச தெரிவித்துள்ளார்.