இறால் பண்ணையாளர்களுக்கு செந்தில் தொண்டமானால் காணிகள் வழங்கிவைப்பு

0
86

கிழக்கு மாகாணத்தின் கடற்றொழிலை அபிவிருத்தி செய்வதற்காக இறால் பண்ணை திட்டங்களுக்கான காணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூர் விவசாயிகளின் சிறிய அளவிலான இறால் பண்ணை திட்டங்களுக்காக குறித்த காணிகள் வழங்கப்பட்டுள்ளன.

காணி அனுமதிப்பத்திரங்கள்
மண்முனை தென்மேற்கு பிரதேசசெயலகம் பட்டிப்பளையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் கொண்டிருந்தார்.

இதன்போது பயனாளிகளுக்கான காணி அனுமதிப்பத்திரங்கள் ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.