முல்லைத்தீவில் உழவியந்திரம் தடம் புரண்டு விபத்து: மூன்று மாணவர்கள் படுகாயம்

0
65

முல்லைத்தீவு முள்ளியவளைப் பகுதியில் உழவியந்திரம் தடம் புரண்டதில் அதில் சென்ற மாணவர்கள் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.

குறித்த விபத்தானது இன்று (14.03.2024)முள்ளியவளை ஆலடி சந்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முள்ளியவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் இல்ல விளையாட்டுப் போட்டி ஒன்று நாளை நடைபெற உள்ள நிலையில் அதற்கான பொருட்களை ஏற்றுவதற்காக பத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் உழவியந்திரத்தில் சென்ற வேளை உழவிந்திரம் தடம் புரண்டுள்ளது.

பொலிஸ் விசாரணை
இந்நிலையில் காயமடைந்த மூன்று மாணவர்களும் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்து தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.