சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியானது தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது. தமிழத்தில் உயிரிழந்த சாந்தனின் உடலானது இன்று பொது மக்களின் அஞ்சலிக்காக தமிழர் தாயகப்பகுதிக்கு பவனியாக கொண்டு செல்லப்பட்டது.
இறுதிக்கிரியை
அதன்படி சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியானது வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் பொது மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.
இதற்கமைய, சாந்தனின் இறுதிக்கிரியை (திங்கட்கிழமை) நாளை காலை 10 மணிக்கு அவரது பிறந்த மண்ணான உடுப்பிட்டியில் நடைபெறவுள்ளது.