வெப்பநிலை அதிகரிப்பு..! எட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

0
132

வெப்பமான காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களில் இன்று (23) உடல் வெப்பநிலை அதிகளவு உணரப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, வடமேற்கு மாகாணம் மற்றும் கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று வெப்பச் சுட்டெண் அதிகமாக இருக்கும் எனவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

எனவே முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகளை வெளிப்புறங்களுக்கு செல்வதை மட்டுப்படுத்தவும் பொதுமக்கள் வலியுறுத்தப்படுகிறார்கள்.