சிறையில் உள்ள கணவனை பார்க்க சென்ற மனைவி குழந்தையுடன் கைது!

0
88

வாதுவ பிரதேசத்தில் சிறையில் உள்ள தனது கணவருக்கு கொடுப்பதற்காக ஆடையின் ஓரத்தில் ஹெரோயினை மறைத்து எடுத்து சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் ஒருவருடன் 7 மாத ஆண் குழந்தையும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

பொலிஸார் தகவல் 

வாதுவ வெரகம அல்விஸ்வத்த பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் 2500 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை தனது கணவனுக்கு வழங்குவதற்காக தனது ஆடையின் ஓரத்தில் மறைத்து வைத்திருந்த போது சிறைச்சாலை அதிகாரிகளால் அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.