இலங்கைப் பொலிஸார் மீது நடாத்திய சீன பெண் தாக்குதல்

0
134

களுத்துறை – பேருவளை மங்கள மாவத்தையில் வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்த சீனப் பெண் தொடர்பில் விசாரணைக்குச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சீனப் பெண் நேற்று (20.02.2024) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பேருவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான 2 பொலிஸ் உத்தியோகத்தர்களும் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபரான பெண்ணை களுத்துறை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பேருவளை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.