முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸாரால் யுத்த காலத்தில் புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்கள் இருப்பதகாக 5ம் வட்டாரம் இரணபாலை புதுக்குடியிருப்பில் உள்ள தென்னந் தோட்டத்தில் அகழ்வில் ஈடுபட்டிருந்த 06 பேர் நேற்று (12.02.2024) கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின்படி, இரணைப்பாலை பிரதேசத்தில் யுத்தத்தின் போது புதைக்கப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் தங்கம் மற்றும் சொத்துக்களை தேடும் நோக்கில் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த 06 நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்
புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.ஹேரத்துக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் பொறுப்பதிகாரி எம்.பி.ஆர் ஹேரத், பிரதீபன், ஜெனன், அபேரத்ன, ஜெயசூரிய, அருஸ் , மதுரங்க, விஜயரத்ன ஆகிய பொலிஸ் குழுவினரால் அகழ்வுப் பணியில் ஈடுபட்டிருந்த குறித்த 06 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்