349 பேர் பொலிஸ் பட்டியலில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இணைப்பு!

0
137

நாடளாவிய ரீதியில் 349 போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பெயர் பட்டியலை பொலிஸாரின் ‘யுக்திய’ பதிவேட்டில் இணைத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

அதன்படி கடந்த 17.12.2023 அன்று ஆரம்பிக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையின் கீழ் நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கைது நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு அனுப்பி வைப்பு

அதன்படி, தற்போது கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்களை உதவியாளர்கள் என அடையாளம் காணப்பட்ட 53 கடத்தல்காரர்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்பட்ட 296 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட 349 போதைப் பொருள் கடத்தல்காரர்களின் பட்டியல் பதில் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் பட்டியல் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

349 பேர் பொலிஸ் பட்டியலில் இணைப்பு! | 349 People Are Attached To The Police List