தனது மகனின் முதல் பிறந்தநாளுக்கு இயக்குநர் அட்லி- ப்ரியா க்யூட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். அவர்கள் பிறந்தநாள் கொண்டாடியுள்ள இடமும் ஸ்பெஷலானதாக உள்ளது.
’ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ என தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக ஹிட் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் அட்லி. அதன் பிறகு, ‘ஜவான்’ படம் மூலமாக பாலிவுட்டில் இயக்குநராக அடியெடுத்து வைத்தார். இந்தியில் முதல் படத்திலேயே ஷாருக்கானை வைத்து படம் இயக்கினார்.
கடந்த வருடத்தில் பாலிவுட்டில் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூல் செய்த படங்களில் ‘ஜவான்’ படமும் ஒன்று. அடுத்து தெலுங்கிலும் இயக்குனராக அடியெடுத்து வைக்கப் போகிறார் என்ற செய்தி வருகிறது. பாலிவுட்டில் எப்படி ஷாருக்கானை வைத்து எடுத்தோரோ தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜூனிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது என சொல்லப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான் இயக்குநர் அட்லியும் அவரது மனைவி ப்ரியாவும் தங்கள் மகன் மீரின் முதல் பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார்கள். பாரிஸில் உள்ள டிஸ்னிலேண்டில் எடுத்தப் புகைப்படங்களைப் பகிர்ந்து, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் மீர்! உனக்கு அதற்குள் ஒரு வயதாகி விட்டது என்பதை நம்பவே முடியவில்லை. உன்னை அழகானப் பரிசாக கொடுத்த கடவுளுக்கு நன்றி. நானும் அப்பாவும் உன்னை எல்லையில்லாமல் நேசிக்கிறோம். கடவுள் உனக்கு மகிழ்ச்சியையும் வளத்தையும் கொடுக்கட்டும்’ என தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர் ப்ரியா – அட்லி தம்பதி. ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை குட்டி மீருக்கு சொல்லி வருகின்றனர்.