நிகழ்நிலை காப்பு சட்டம் இன்று முதல் அமுலுக்கு; சபாநாயகர் கையெழுத்து

0
215

கடந்த ஜனவரி 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலைக் காப்பு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (2024.02.01) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.

இந்நிலையில், நிகழ்நிலை காப்பு சட்டம் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. நாடாளுமன்றில் நிகழ்நிலை காப்பு சட்டமூலம் (Online Safety Bill) 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதுடன் இதற்கு ஆதரவாக 108 வாக்குகள் கிடைத்துள்ளதோடு எதிராக 62 வாக்குகளும் கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.