கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0
108

கொழும்பு துறைமுகத்திற்கு வரும் வெளிநாட்டு கப்பல்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. செங்கடலில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையினால் கொழும்பு துறைமுகத்திற்கு அதிக அளவு கப்பல்கள் வருகை தருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் 29 நாட்களில் கொழும்பு துறைமுகத்திற்கு 330க்கும் மேற்பட்ட கப்பல்கள் வருகை தந்துள்ளன.

இலங்கை துறைமுக அதிகாரசபையின் சிரேஸ்ட பணிப்பாளர்களில் ஒருவரான யூ. குமார இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் பரிமாற்றங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது முதல் 29 நாட்களில் கொள்கலன் பரிமாற்றங்கள் சுமார் 60 வீதத்தினால் அதிகரித்துள்ளது.