ஆதாரம் உறுதி செய்யப்பட்டால்…பதவியை இராஜினாமா செய்ய தயார்! நளீன் பெர்னாண்டோ

0
112

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் போது இலஞ்சம் பெறுவதற்கான ஆதாரம் இருந்து அது உறுதி செய்யப்பட்டால்  அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய தயார் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் அசேல சம்பத், முட்டை இறக்குமதியில் கமிசன் கொடுக்கல் வாங்கல் இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது