‘கேப்டன் மில்லர்’ எனது நாவலை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம்: வருத்தத்தில் நடிகர் வேல ராமமூர்த்தி

0
124

சமீபத்தில் வெளியான ‘கேப்டன் மில்லர்’ திரைப்படம் தனது ‘பட்டத்து யானை’ நாவலை பின்னணியாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக நடிகர் வேல ராமமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இயக்குநர் அருண் மாதஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். இந்தத் திரைப்படம் கடந்த 12ஆம் திகதி வெளியானது.

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதையானது நடிகர் வேல ராமமூர்த்தியின் பட்டத்து யானை நாவலிலிருந்து திருடப்பட்டுள்ளதாக டிஸ்கவரி பதிப்பகத்தின் பதிப்பாளர் வேடியப்பன் அவரது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Oruvan

இந்நிலையில், இதுகுறித்து நடிகரும் எழுத்தாளருமான வேல ராமமூர்த்தி பேட்டியொன்றில் பேசியுள்ளார். அதில்,“கேப்டன் மில்லர் படத்தின் கதை நான் எழுதிய பட்டத்து யானை நாவலை பின்னணியாக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக கேள்விப்பட்டேன்.

பட்டத்து யானை நாவலை எழுதிய நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேன். என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். இப்படியெல்லாம் செய்ய அசிங்கமா இல்லையா? கேப்டன் மில்லர் திரைப்படத்தில் மட்டுமல்ல ஆர்.ஆர்.ஆர் படத்திலும் எனது நாவலிலிருந்து சில சீன்கள் திருடப்பட்டுள்ளன.

புகார் கொடுத்தாலும் வலுத்தவர்கள் பக்கம்தான் நியாயம் பேசுவார்கள். ஒரு படைப்பாளியாக இது எனக்கு மிகுந்த வேதனையளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.

Oruvan