உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தை அமைக்கும் துபாய்!

0
156

உலகின் மிக உயர்ந்த கட்டடமாக கருதப்படும் டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான கட்டடம் ஒன்று சவூதி அரேபியாவில் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடையும்போது அது டுபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவை (burj khalifa) விட உயரமான கட்டடமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

சவூதி அரேபியாவின் மையத்தில் ஜெட்டாஹ் டவர் அல்லது கிங்டம் டவர் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த உயர்ந்த கட்டடம் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளது. இதன் உயரம் 1000 மீட்டர் (1 கி.மீ / சுமார் 3,281 அடி) இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஈர்ப்பை மையமாக வைத்து கட்டப்பட்டுவரும் ஜெட்டாஹ் டவர், உணவகம், தங்கும் விடுதிகள், ஆடம்பர குடியிருப்புகள், அலுவலகங்கள் என பலவற்றை உள்ளடக்கியதாக கட்டப்பட்டு வருகிறது. டுபாயில் கடந்த 2004ஆம் ஆண்டு புர்ஜ் கலிஃபா கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தொடர்ந்து 6 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணிகள் முடியும்போது உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையைப் பெற்றது.

828 மீட்டர் உயரம் கொண்ட புர்ஜ் கலிஃபா, உலகில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தமான கட்டடமாக மாறியது. சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் டுபாயின் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடம், எண்ணெய் உற்பத்திக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் துறையில் அதிக இலாபம் கொடுக்கும் இடமாக மாறியுள்ளது.