போராட்டத்துடன் வெற்றியீட்டிய இலங்கை அணி

0
121

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டி நேற்று (14.01.2024) நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்தது.

​இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்டுக்களை இழந்து 143 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

போராட்டத்துடன் வெற்றியீட்டிய இலங்கை அணி | Sri Lanka Won Today Match

அணிசார்பில் அதிகபடியாக சிக்கந்தர் ராசா 62 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் இலங்கை அணியின் மகீஷ் தீக்ஷன, வனிந்து ஹசரங்க தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக எஞ்சலோ மெத்யூஸ் 46 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். பந்துவீச்சில் சிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா 13 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.     

போராட்டத்துடன் வெற்றியீட்டிய இலங்கை அணி | Sri Lanka Won Today Match