”குண்டுர் காரம்” திரைப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட காணொளிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் மகேஷ் பாபு நடித்துள்ள ”குண்டுர் காரம்” திரைப்படம் நாளைய தினம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நேற்று இப்படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஆந்திராவில் உள்ள குண்டூர் பகுதியில் நடைபெற்றது. இதில் கட்டுக்கடங்காத ரசிகர்கள் திரண்டனர்.
கூட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸாரும் முயன்றனர். ஆனால் ரசிகர்கள் தடுப்புகளை தள்ளிவிட்டு நாற்காலிகளை கொண்டு ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.
இதை பார்த்த பொலிஸார் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக தடியடி நடத்தியுள்ளனர். இது குறித்த காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை தடுக்க வந்த பொலிஸ் அதிகரி ஒருவரும் இந்த சம்பவத்தில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#WATCH | Andhra Pradesh: A police official identified as Venkata Rao, Sub Inspector at Old Guntur police station, was injured in a stampede during the pre-release event of 'Guntur Kaaram' featuring actor Mahesh Babu in Guntur district. pic.twitter.com/rCHO1OmEeZ
— ANI (@ANI) January 10, 2024