தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவேந்தல் நிகழ்வு: யாழில் உணர்வுபூர்வ ரீதியில் அனுஷ்டிப்பு!

0
124

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூறும் விதமாய் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் உணர்வுபூர்வ ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டது.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சொலமன் சிறில் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மதத் தலைவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கட்சி ஆதரவாளர்கள் பொது மக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

இதேவேளை உயிர் நீத்தவர்களுக்கு அகவணக்கம் செலுத்தி பொதுச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

Oruvan
Oruvan
Oruvan