மீண்டும் T20 ஆட்டத்தில் களமிறங்கும் மெத்தியூஸ்: முதல் போட்டி ஜன. 14

0
151

சிம்பாப்வேக்கு எதிராக சொந்த மண்ணில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் இடம்பிடித்துள்ளார்.

36 வயதான அவர் இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளுடனான டி20 போட்டியில் விளையாடினார். அதேநேரம் காயங்களினால் அவதிப்பட்ட அவர் 2021 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்தும் விலகியிருந்தார்.

பின்னர், கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

இந்நிலையில் எதிர்வரும் 14 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ள சிம்பாப்வே அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளுக்கான இலங்கை அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்.

டி20 தொடருக்கான அணியினை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நேற்றைய தினம் அறிவித்தது. 16 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்க நியமிக்கப்பட்டுள்ளார்.