கனடாவில் வேன் தாக்கி குடும்பம் பலி: குற்றவாளியை நேருக்கு நேர் சந்தித்த உறவினர்கள்

0
142

கனடாவில் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்துக்காக ஒரு குடும்பம் வேன் மோதிக் கொல்லப்பட்ட நிலையில் குற்றவாளியை நேருக்கு நேராகப் பார்த்து தன் உள்ளக் கொந்தளிப்பைக் கொட்டித் தீர்த்தார் ஒரு அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்.

2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் கனடாவில் ஒன்ராறியோவிலுள்ள லண்டன் பகுதியில் பாகிஸ்தானியர்களான Salman Afzaal (46), அவரது மனைவி Madiha Salman (44), தம்பதியரின் மகள் Yumna Salman (15), மகன் Fayez Afzal (9) மற்றும் Afzaalஇன் தாயார் Talat Afzaal ஆகியோர் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, Nathaniel Veltman (20) என்ற நபர் வேண்டுமென்றே தனது வேனைக் கொண்டு அவர்கள் மீது மோதியிருக்கிறார்.

வேன் மோதியதில் Salman Afzaal, அவரது மனைவி Madiha Salman, மகள் Yumna Salman மற்றும் 74 வயதாகும் Afzaalஇன் தாய் ஆகியோர் கொல்லப்பட்டனர். தம்பதியரின் மகன் Fayez Afzal படுகாயமடைந்தான்.

இந்த கோர சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட Nathaniel மீது நான்கு கொலைக் குற்றச்சாட்டுகள் ஒரு கொலை முயற்சிக் குற்றச்சாட்டு மற்றும் தீவிரவாதக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டன.

உயிரிழந்தவர்களின் இழப்பு தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய பாதிப்புகளை நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினார்கள் அவர்களுடைய உறவினர்களும், நண்பர்களும்.

அப்போது கொல்லப்பட்ட Talat Afzaalஇன் மகளான Tabinda Bukhari குற்றவாளியை நேருக்கு நேராகப் பார்த்து நீ என் தாய் மீது வேனை மோதி அவருக்குக் கொடுத்த வேதனையை என்னால் அளவிடமுடியாது. உன் முன்னால் நின்று சொல்கிறேன், நீ எங்களிடமிருந்து விலை மதிப்பில்லாத ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டாய் என கண்ணீரை அடக்க முடியாமல் குமுறினார்.

எந்த குறுக்குச் சாலையில் நின்றாலும் உயிரிழந்த என் தாய், என் சகோதார், அவருடைய மனைவி, அவர்களுடைய மகள் என அவர்கள் அனைவரும் என்னுடன் நிற்பது போன்ற உணர்வை என்னால் தவிர்க்கவே முடியவில்லை என்கிறார் Tabinda.

அவர் கூறியதை எந்த உணர்வையும் வெளிப்படுத்தாமல் கேட்டுக் கொண்டிருந்த Nathanielக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அவரது செயல்கள் தீவிரவாதச் செயல்களா என்பது குறித்து நீதிபதி Renee Pomerance விரைவில் முடிவு செய்ய உள்ளதால் அவரது முடிவுக்கேற்ப Nathanielஇன் தண்டனை மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் அதாவது ஜனவரி 23ஆம் திகதி, இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.