வணிகமாக பார்க்கப்படும் ரியாலிட்டி ஷோக்கள்: பிரபல தென்னிந்திய பாடகர் வழங்கிய அறிவுரை

0
140

பாடல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது முடிவல்ல. அது ஆரம்பம் என தெரிவித்த பிரபல தென்னிந்திய பாடகர் பாலக்காடு ஸ்ரீராம் முறைப்படி சங்கீதம் கற்று தொடர்ந்து இசைத்துறையில் பயணித்து சாதிக்கவேண்டும் என்றார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று (2024.01.03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே தென்னிந்தியாவின் பிரபல பாடகரும் புல்லாங்குழல் இசைக் கலைஞருமான பாலக்காடு ஸ்ரீராம் இதனை குறிப்பிட்டார்.

மேலும் தெரிவிக்கையில்,

தொலைக்காட்சி பாடல் போட்டிகளில் வெற்றி பெறுவது என்பது பெரிய விடயமல்ல. அங்கும் முன்னரை போல் அல்லாமல் பல பிரச்சனைகள் உள்ளது. நானும் சில போட்டிகளில் நடுவராக இருந்துள்ளேன்.

பாடல் போட்டியில் வெற்றி பெறுவது என்பது முடிவல்ல. இதுவே ஆரம்பம். ஆகவே முறைப்படி சங்கீதம் கற்று தொடர்ந்து இசைத் துறையில் பயணித்து சாதிக்க வேண்டும்.