சீனாவில் தன்னை கடித்த எலியை வெறித்தனமாக கடித்த மாணவி!

0
157

சீனாவில் மாணவி ஒருவரை கடித்த எலி உயிரிழந்த நிலையில், குறித்த மாணவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில்18 வயதான கல்லூரி மாணவி ஒருவர் படித்து வருகிறார்.

இந்த நிலையில், அந்த மாணவியை எதிர்பாராதவிதமாக எலி ஒன்று கடித்துள்ளது. அந்த மாணவியின் விரலில் எலி கடித்ததாக கூறப்படுகிறது. இதனால் வலியால் துடித்த அந்த மாணவி ஆத்திரத்தில் அந்த எலியை பழிவாங்க நினைத்துள்ளார். இதனால் உடனடியாக தன்னை கடித்த எலியை பிடித்து வெறித்தனமாக கடித்து வைத்துள்ளார்.

தன்னை கடித்த எலியை வெறித்தனமாக கடித்த மாணவி! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் | China Girl Student Bit The Rat That Bit Her

அதன் கழுத்து பகுதியில் பலமாக கடித்து தனது கோபத்தை தீர்த்துக்கொண்டார். அந்த மாணவியின் வெறித்தனமான கடியால் அந்த எலி உயிரிழந்துவிட்டது.

மேலும் எலி கடித்ததில் காயம் அடைந்த அந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து மருத்துவமனையில் அந்த மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த மாணவி நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை இதுபோல யாரும் செய்ய வேண்டாம் என அவரது தோழி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தன்னை கடித்த எலியை வெறித்தனமாக கடித்த மாணவி! அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் | China Girl Student Bit The Rat That Bit Her