திருமணமாகி 14 வருடத்துக்கு பின் காதல் கணவரை விவாகரத்து செய்தார் அயலான் பட நடிகை இஷா கோபிக்கர்

0
159

அயலான் படத்தில் நடித்துள்ள நடிகை இஷா கோபிக்கர் தன் காதல் கணவனை திடீரென விவாகரத்து செய்து பிரிந்துள்ளதால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

சந்திரலேகா என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இஷா கோபிக்கர் நடிகையாக அறிமுகமானவர். இப்படத்தில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இதையடுத்து பிரசாந்தின் காதல் கவிதை படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வந்த அவர், என் சுவாச காற்றே, விஜய்க்கு ஜோடியாக நெஞ்சினிலே மற்றும் விஜயகாந்தின் நரசிம்மா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனி இடத்தினை பிடித்திருந்தார். கோலிவுட்டில் தொடர்ந்து சரிவர பட வாய்ப்புகள் கிடைக்காததால் பொலிவுட் பக்கம் சென்றார்.

Oruvan

பின்னர் கடந்த 2009ம் ஆண்டு திம்மி நரங் என்கிற தொழிலதிபரை காதலித்து கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு ஒரு மகளும் இருக்கிறார். சுமார் 14 ஆண்டுகள் சுமூகமாக சென்றுகொண்டிருந்த இவர்களது திருமணம் வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து செய்து பிரிய முடிவெடுத்தனர். தற்போது கணவரை பிரிந்து இஷா கோபிக்கர் மகளுடன் தனியாக வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

நடிகை இஷா கோபிக்கர் விவாகரத்துக்கு பின்னர் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கி உள்ளார். அவர் நடிப்பில் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.