ரஜினியின் வருகை: கடும் அதிருப்தியில் தூத்துக்குடி மக்கள்

0
203

தூத்துக்குடிக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் மழை வெள்ள சேதம் எதையும் பார்வையிடாததால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த அதி கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். ரஜினிகாந்த் வருவதாக தகவல் அறிந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் விமான நிலையம் வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

Oruvan

பின்னர் ரஜினிகாந்த் தனது சொந்த பணிகளுக்காக கன்னியாகுமரி புறப்பட்டுச் சென்றார். தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகள் எதையும் அவர் பார்வையிடவில்லை.

இது தென்மாவட்ட மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக கன்னியாக்குமரி சென்றதாக கூறப்படுகிறது.

Oruvan