புதிய எதிர்பார்ப்புகளை உருவாக்கும் விழாவாக நத்தார் பண்டிகை அமையட்டும்: ஜனாதிபதி வாழ்த்து

0
127

எதிர்பார்ப்புக்களைப் புதுப்பிப்பதற்கான கடமை மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றி அனைவருக்கும் புதிய எதிர்பார்ப்புக்களை தோற்றுவிக்கும் திருநாளாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய பிரார்த்திப்போம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க விடுத்துள்ள நத்தார் தின வாழ்த்து செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

“வறியவர்களுடன் ஒரு வேளை உண்ணுங்கள்” என்ற விடயத்தை முன் நிறுத்தி, மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டாடும் நாம், ஒருபோதும் யதார்த்தத்தை மறக்க கூடாது.

அத்துடன் மானிடர்களைப் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்து கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

நத்தார் கொண்டாத்தினால் சிறந்த மாற்றங்கள் கிடைக்கும். அவ்வாறான மாற்றங்கள் உளப்பூர்வமானதும் உண்மையானாதுமாக இல்லாத போது நத்தார் கொண்டாட்டம் அர்த்தமற்றாகிவிடும்.

பல்வேறு சவால்கள் நம்முன் நிற்கின்ற தருணத்தில் நாம் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றோம். நாட்டின் சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்து கொண்டு பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்.

அதேநேரம், உலக மக்கள் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக இம்முறை நத்தார் பண்டிகை அமைய என வாழ்த்துகிறேன்” என்றும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.