ஐரோப்பிய நாட்டையே உலுக்கிய சம்பவம்: 15 பேரை கொன்ற மாணவனின் அதிர்ச்சி பின்னணி!

0
163

ஐரோப்பிய நாடான செக் குடியரசில் உள்ள பராக்கில் அமைந்துள்ள சார்லஸ் பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மர்ம நபரொருவர் சராமரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

இந்த துப்பாக்கிச்சூட்ட்டில் இதுவரையில் 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 30 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நேற்றைய தினம் (21-12-2023) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய சம்பவம்: 15 பேரை கொன்ற மாணவனின் திடுக்கிடும் பின்னணி! | Czech Prague University Shooter David Kozak Shock

நேற்று இந்த பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர் தான் கையில் வைத்திருந்த நவீனரக துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக சுட்டுள்ளார்.

இதனால் உயிருக்கு பயந்த மாணவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். சிலர் வகுப்பறை கதவுகளை மூடிக்கொண்டனர். பலர் குண்டுபாய்ந்து கீழே சரிந்தனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 15 பேர் இறந்தனர். 30-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதையடுத்து பொலிஸார் அந்த பல்கலைக்கழகத்தை சுற்றி வளைத்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய சம்பவம்: 15 பேரை கொன்ற மாணவனின் திடுக்கிடும் பின்னணி! | Czech Prague University Shooter David Kozak Shock

படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞனும் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். அவர் தனக்குதானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பொலிஸார் சுட்டுக்கொன்றனரா? என்பது தெரியவில்லை.

ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய சம்பவம்: 15 பேரை கொன்ற மாணவனின் திடுக்கிடும் பின்னணி! | Czech Prague University Shooter David Kozak Shock

பொலிஸார் நடத்திய விசாரணையில் அவரது பெயர் டேவிட் கோசாக் (வயது 24) என்பதும், அந்த பல்கலைக்கழக மாணவர் என்பதும் தெரியவந்தது.

இவர் மீது பொலிஸில் எந்த குற்ற வழக்குகளும் இல்லை. சிறந்த மாணவராகவும் திகழ்ந்து வந்தார். அவர் சட்டப்பூர்வமாக பல துப்பாக்கிகள் வைத்து இருந்தார். மேலும் நிறைய வெடிமருந்துகளும் வைத்து இருந்தார்.

ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய சம்பவம்: 15 பேரை கொன்ற மாணவனின் திடுக்கிடும் பின்னணி! | Czech Prague University Shooter David Kozak Shock

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு பராக் நகருக்கு மேற்கே சொந்த ஊரான ஹோக் டவுனில் தனது தந்தையை கொன்ற திடுக்கிடும் தகவலும் வெளியாகி இருக்கிறது.

டேவிட் கோசாக் ஏன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐரோப்பிய நாடொன்றை உலுக்கிய சம்பவம்: 15 பேரை கொன்ற மாணவனின் திடுக்கிடும் பின்னணி! | Czech Prague University Shooter David Kozak Shock

இந்த தாக்குதலின் பின்னணியில் பயங்கரவாத இயக்கங்கள் தொடர்பு எதுவும் இல்லை என அந்நாட்டு மந்திரி விடராகுசன் தெரிவித்துள்ளார். 

செக் குடியரசு நாட்டை பொறுத்தவரை இது போன்ற துப்பாக்கி கலாச்சாரம் தலை தூக்கியது கிடையாது. முதன் முறையாக இந்த பெரிய அளவிலான தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.