இசைஞானி இளையராஜாவின் இசைக்கூடத்துக்கு சென்ற இயக்குநர் பா.ரஞ்சித் அவரை நேரில் சந்தித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை கொடுத்து பா.ரஞ்சித் முன்னணி இயக்குநராக உயர்ந்திருப்பவர்.
இவர் இயக்கத்தில் தற்போது தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது. தங்கலான் திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளதால் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தங்கலானை தொடர்ந்து சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை பா.ரஞ்சித் இயக்க உள்ளார்.
இந்த நிலையில் அவர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றன.
அந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளங்களில் பகிர்ந்து எண்ணமெல்லாம் வண்ணமம்மா என பதிவிட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.