தேநீர் கொண்டு வர தாமதமானதால் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன்..!

0
123

காலையில் தேநீர் கொண்டு வர தாமதமானதால் மனைவியை, கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவன், மனைவிக்கு தகராறு

இந்திய மாநிலமான உத்தர பிரேதசம், காஜியாபாத்தில் உள்ள போஜ்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஃபசல்கர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் தரம்வீர்(60) மற்றும் சுந்தரி தேவி(50). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை இளைய மகன் தூங்கி கொண்டிருந்தார். மற்றொரு மகன் குழாயில் தண்ணீர் எடுக்கச் சென்றிருந்தார். அப்போது, காலை 6 மணிக்கு தர்மவீர் தனது மனைவி சுந்தரியிடம் தேநீர் கொடுக்கும்படி கூறியுள்ளார்.

இதில் தர்மவீர்க்கு அடிக்கடி தேநீர் குடிக்கும் பழக்கம் உள்ளதால், இந்த பழக்கம் உடல்நலத்திற்கு நல்லதல்ல என சுந்தரி கூறியுள்ளார். இதனால், கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

மனைவியை கொன்ற கணவர்

up issue

அப்போது வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த தர்மவீர் வாளை எடுத்து சுந்தரியை தாக்கியுள்ளார். சுந்தரியின் தலையை துண்டித்து அவரை கொன்றுவிட்டு அங்கிருந்து தர்மவீர் தப்பித்துச் சென்றுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மூத்த மகன் கொடுத்த புகாரின் படி வழக்குப் பதிவு செய்த போஜ்பூர் காவல் துறையினர் தர்மவீரை தேடி வருகின்றனர். மகன் கண்முன்னே மனைவியை கணவன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.