இந்திய அணியை பழி தீர்த்த தென்னாப்பிரிக்கா: சமனில் உள்ள ஒருநாள் தொடர்

0
115

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்து விளையாடிய இந்திய அணி 46.2 ஓவர்களில் 211 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் சாய் சுதர்சன் அதிகபட்சமாக 62 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனையடுத்து களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 42.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 215 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்க அணி சார்பில் டோனி டி ஜோர்ஸி அபாரமாக விளையாடி 119 ஓட்டங்கள் குவித்தார்.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றிருந்த நிலையில் இரண்டாம் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றுள்ளது.

இதனையடுத்து 1-1 என்ற கணக்கில் இந்த தொடர் சமனில் உள்ளது. வெற்றிக் கோப்பையை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் இறுதிப்போட்டி நாளை நடைபெறவுள்ளது.