இல்லங்களில் உள்ள சிறுவர்களின் உளநலம் தொடர்பாக விசேட கவனம் – டயானா கமகே

0
138

சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் உளநலம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்தார்.

சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களின் நிலை தொடர்பில் சமிந்த விஜேசிறியினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் இராஜாங்க அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார். அத்துடன் விசேட தேவை உடைய சிறுவர்கள் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் சிறுவர்கள் இல்லங்களில் உள்ள சிறுவர்களை பராமரிப்பவர்களுக்கு விசேட பயிற்சியுடன் கூடிய பணியாளர் இல்லை என்பதை தாம் ஏற்றுக்கொள்வதாகவும் அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

சிறுவர் இல்லங்களை நிரப்புவதால் பிரயோஜனம் இல்லை எனவும் அவர்களது வாழ்க்கையை வளமாக்க கூடிய வகையில் சட்டரீதியான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களை நீதிமன்றம் அழைத்து செல்வதற்கான போக்குவரத்து நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவதாக இதன்போது இராஜாங்க அமைச்சர் டயானா கமகே உறுதியளித்தார்.