மாவீரர் தினத்தில் 19 வருடங்களின் பின்னர் கவனத்தை ஈர்க்கும் யாழ் பல்கலைக்கழக வளைவு

0
180

கடந்த 2004ஆம் ஆண்டுக்குப் பின்னர் மாவீரர் நாளில் யாழ் பல்கலைகழக அலங்காரம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இன்றையதினம் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் மண்ணுக்காக மடிந்த எம்மவர்களின் மாவீரர் நினைவேந்தல் அனுடிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அந்தவகையில் துயிலுமில்லங்கள் , மற்றும் நினைவேந்தும் இடங்களில் சிவப்பு, மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டு தாயகமெங்கும் மாவீரர் நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் 19 வருடங்களின் பின்னர் யாழ்ப்பாண பல்கலகழகத்தில் குறித்த வளைவு அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.