சித்திரவதையில் உயிரிழந்த வட்டுக்கொட்டை அலெக்ஸ்; மரண விசாரணை இன்று

0
261

பொலிஸ் சித்திரவதையில் உயிரிழந்த வட்டுக்கொட்டை சித்தன்கேணி இளைஞன்   அலெக்ஸ் குறித்து விசாரணை இன்று நிடம்பெறவுள்ள நிலையில் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகம் முன்பாக வழமைக்கு மாறாக அதிகளவு பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனின் நீதிமன்ற விசாரணைகள் யாழ்ப்பாண நீதிமன்றில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளது.

பொலிஸ் சித்திரவதையில் உயிரிழந்த வட்டுக்கொட்டை அலெக்ஸ்; மரணம் குறித்து விசாரணை இன்று ; பெருமளவு பொலிஸார் குவிப்பு! | Inquest Death Vaddukottai Alex Today

 நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில்  விசாரணை

இளைஞன் உயிரிழந்தது , யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் என்பதனால் , கொலை தொடர்பிலான வழக்கு விசாரணைகள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ ஆனந்தராஜா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  கடந்த திங்கட்கிழமை இளைஞனின் உடற்கூற்று பரிசோத்னை யாழ்ப்பாணம் போதனா வைத்திசாலையில் மேற்கொள்ளப்பட்ட போது , நீதவான் நேரில் என்று சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிசோதனை தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

பொலிஸ் சித்திரவதையில் உயிரிழந்த வட்டுக்கொட்டை அலெக்ஸ்; மரணம் குறித்து விசாரணை இன்று ; பெருமளவு பொலிஸார் குவிப்பு! | Inquest Death Vaddukottai Alex Today

தொடர்ந்து யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு சென்று , சிறைச்சாலை அத்தியட்சகர் மற்றும் உத்தியோகஸ்தர்களிடமும் வாக்கு மூலங்களையும்  நீதவான்  பெற்று இருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மன்றில் எடுத்து கொள்ளப்படவுள்ள நிலையில் , சிறைச்சாலை அத்தியட்சகர் , சட்ட வைத்திய அதிகாரி மற்றும் கொலை செய்யப்பட்ட இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் ஆகியோர் மன்றில் தோன்றி தமது சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளனர்.

பொலிஸ் சித்திரவதையில் உயிரிழந்த வட்டுக்கொட்டை அலெக்ஸ்; மரணம் குறித்து விசாரணை இன்று ; பெருமளவு பொலிஸார் குவிப்பு! | Inquest Death Vaddukottai Alex Today

உடற்கூற்று பரிசோதனை அறிக்கை

அதேவேளை சட்ட வைத்திய அதிகாரி , உடற்கூற்று பரிசோதனை அறிக்கையையும் மன்றில் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த இளைஞனுக்காக பெருமளவான சட்டத்தரணிகள் முன்னிலையாக தீர்மானித்துள்ளனர்.

பொலிஸ் சித்திரவதையில் உயிரிழந்த வட்டுக்கொட்டை அலெக்ஸ்; மரணம் குறித்து விசாரணை இன்று ; பெருமளவு பொலிஸார் குவிப்பு! | Inquest Death Vaddukottai Alex Today

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன்  திருட்டு சம்பவம் ஒன்றி கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் கைது செய்யப்பட்டு , சித்திரவதைக்கு உள்ளான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.  

பொலிஸாரின் சித்திரவதையால் இளைஞன்  உயிரிழந்த சம்பவம்  பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், புலம்பெயர் தமிழர்களும்  பொலிஸாரின் அடாவடிக்கு  கடும் கண்டனங்களை  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.