200 மணித்தியால விசேட வேலை திட்டம்

0
175

மட்டக்களப்பு மாவட்டத்தில் அனர்த்தங்களை தடுக்கும் நோக்குடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் இளைஞர் யுவதிகளுக்கு  200 மணித்தியால புதிய வேலை திட்டமொன்று இன்று அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எஸ் எம் ரியாஸ் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் மாவட்ட செயலகமும் இணைந்து இளைஞர் யுவதிகளுக்கு இடையே 200 மணித்தியால புதிய வேலை திட்டமொன்று இன்று (2023.11.21) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

200 மணித்தியால விசேட வேலை திட்டம் | 200 Hours Special Work Program

மட்டக்களப்பு மாவட்டத்தில்  நடைபெற்ற அனைத்து முகாமைத்துவ வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு காத்தான்குடி, ஆரையம்பதி ஆகிய  பிரதேச செயலகங்களில் இருந்து 90 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

ஒரு மாத காலங்களைக் கொண்ட 200 மணித்தியால குறித்த அனைத்து முகாமைத்துவ வேலைத்திட்ட செயலமர்வுகள் காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

இயற்கை மற்றும் செயற்கை அனர்த்தங்களின் போது எவ்வாறு செயல்படுவது என்பது தொடர்பாக 200 மணித்தியாலங்கள் குறித்த இளைஞர் யுவதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

200 மணித்தியால விசேட வேலை திட்டம் | 200 Hours Special Work Program