அஜித்தின் ஓகேக்காக வெயிட்டிங்; மாஸ்டர் பிளானில் அட்லீ

0
150

‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து ஹிட் படங்களை இயக்கினார். தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ஜவான்’.

பான் இந்தியா படமாக உருவான இப்படம் பாக்ஸ் ஆபீஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலை குவித்து பாலிவுட் படங்களை பின்னுக்கு தள்ளியது.

இதையடுத்து அட்லீ அடுத்தது எந்த நடிகருடன் இணையவுள்ளார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், அஜித்தை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில், “ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாரா மூலமாக அஜித்தை சந்தித்தேன். அப்போது அவர் என்னை பார்த்ததும் பள்ளி படிப்பை முடித்துவிட்டாயா? என்று கேட்டார். என் கஷ்டமான நாட்களில் அவர் எனக்கு ஆறுதலாக இருந்தார். அஜித் சாருக்காக பயங்கரமான ஒரு கதையை ரெடி செய்துள்ளேன். அவர் ஓகே என்று சொல்லிவிட்டால் படப்பிடிப்பை தொடங்கிவிடலாம்” என்று பேசியதாக தெரிவிக்கப்டுகிறது.