உடல் எடையை குறை; கொலைக் குற்றவாளியை வீட்டிற்கு அனுப்பிய இத்தாலி நீதிமன்றம்!

0
173

இத்தாலியில் உடல் நிறை அதிகரித்ததால் கொலைக் குற்றவாளி ஒருவர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுளார். திமித்ரி ஃபிரிகேனோ என்பவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது காதலியை 57 முறைகள் கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நாளுக்கு நாள் அதிகரித்த எடை

இந்நிலையில் சிறையில் இருந்தபோது அவரது உடல் எடை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆரம்பத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு 120 கிலோவாக இருந்த திமித்ரியின் உடல் எடை கடந்த ஒரே ஆண்டில் 200 கிலோகிராமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து உடல் எடையை குறைக்கும் வகையில் தம்மை விடுவிக்க வேண்டும் என்று கோரி திமித்ரி தொடுத்த வழக்கை விசாரித்த டூரின் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

அதோடு சிறையில் அவருக்கு கலோரிகள் குறைவான சிறப்பு உணவை வழங்க வழியில்லை என்பதால் அவரது பெற்றோர் இல்லத்திலேயே வீட்டுக் காவலில் இருந்து டயட் உணவை உட்கொள்ள குற்றவாளிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.